Pin It

Widgets

யாருமற்ற ஓர் கடர்கரையில்,
செருப்பில்லாது

பாதச்சுவடுகள் பதித்து
அலையேதும் ஏறிவிடாது

விரல் கோர்த்தபடி
உரையடலேதுமின்றி

பின்னப்படாத கூந்தல்
காற்றில் வருடியபடி

கால்கள் சோர்வடையும்
இடமமர்ந்து

தோள்பற்றி
தோள் சாய்த்து

வெண்பாதம்
உள்ளங்கைப்பற்றி

கால்விரலிடுக்குகள்
மண் அகற்றி

கண்பார்த்து
தலை மோதி

செல்லமாய்
அடித்து விளையாடி

மீண்டுமொரு
மெளனம் தின்று

மூச்சுக்காற்றில்
நேரம் கடத்தி

கணுக்கால்
அலையடிக்க நனைந்து

விரல் நகம்
உராய்ந்து

காதல் கொழுத்தி
மோகம் எரிந்து

தேகத்தணலெடுத்து
கட்டில் பரப்பி

வியர்வையில் தணிய
வா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets