Pin It

Widgets

வா!

Monday, June 10, 2013 | 0 comments »

இரு கை குவித்து
ஏந்திய நீர்
முகம் தெளித்து

நெற்றி பரப்பில்
பரவி கூர் நாசி
கிளை பிரித்து

இதழ் மேடை
கடந்தோடும்
நீரலைகளை

கழுத்தின்
பள்ளத்தாக்கில்
ததும்பும் துளி பருக

இன்னும் கொஞ்சம்
வியர்த்தால் தான் என்ன?
வா கூடலாம்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets