Pin It

Widgets

இன்னும் வழங்கப்படாத முத்தமும்
எடுக்கப்படாத முத்தமும் மீதமிருப்பதாய்
உதடு கோர்க்க அழைக்கிறாய்

வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை
பொருட்படுத்தாது கடைசியென,
பதில் தவிர்த்து நெருங்குகிறாய்

கையிரண்டின் பக்கவாட்டில்
இறுகப்பற்றிய கைபிரித்து
இடது மார்பில் அழுத்தி முகம் பார்க்கிறாய்

தேம்பிய விழிகள் கண்டு விலகியவள்
மழைக்கால ஈசல் போல
சட்டென மனதில் பிறந்து இறக்கிறாய்

ஒவ்வொரு மாலையும் கடக்கும்
அந்தத் தெருவில் பூக்காத பூக்கள் உதிர
விழிகளுக்குள் வந்து போகும் பிம்பத்தில்

இருவரின் விரல்களும் துண்டிக்கப்பட்டிருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets