Pin It

Widgets

அழையாதே எனும் உன்
வார்த்தை மீறி உன்னை
அழைத்து விடுவேனோவென்று
பயமாயிருக்கிறது

எண்களென்றால் அது-உன்
அழைபேசி எண்களென்றே
பதியம் வைத்து வளர்த்திருக்கிறது
காதல்

எனையறியாது மனனமானதை
எப்படி மறப்பது? எனக்கு
மீண்டும் பயமாயிருக்கிறது
அழைக்கத்துவங்கி துண்டித்துக்கொண்டிருக்கிறேன்

நீயாவது மனம் மாறிவிடு
நான்கு வழிச்சாலைபோல
நாவை கிழித்து வைத்திருப்பதாய்
மருத்துவர் ஏளனம் செல்கிறார்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets