Pin It

Widgets


முதலிரவு முடிந்த காலையில்
கூந்தலை காற்றில் உலவவிட்டபடி
மாடியிலிருந்தவள் கீழே போகலாமா என்றாள்

இப்படியேவா? என்றவன்
வலதுஓரக்கூந்தலை வருடிக்கொண்டே
பின்னிப்போடு பூ வைக்க அழகாக இருக்குமென்றான்

எனக்கு தெரியாதென்றவளை
சன்னலின் ஓரமாய் தலை திருப்பி
மூன்று கற்றைகளாக்கி பின்னிக்கொண்டிருந்தான்

வளைவாக வெட்டியிருந்த
அவள் ஜாக்கெட்டின் வளைவில் விரல் நுழைது
அவனும் ஒரு வளைவு செய்தான்

போதும் போதும் என நழுவி
கண்ணாடிப்பார்த்து நல்லாயிருக்கு என்றாள்
முத்தமிட நெருங்கி விலகி கீழே சென்றார்கள்

அவள் புகைப்படத்தொடு அவன்
ஜடை பின்னிக்கொண்டிருக்கிறான்
யாரும் தொந்தரவு செய்யாதிர்கள்...

இப்படிக்கு
நிலைக்கண்ணாடி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets