Pin It

Widgets

ஒத்திகை

Monday, October 29, 2012 | 0 comments »


விந்துக்களின்
பிசுபிசுப்பினை விரும்பாதவள்
யோனியடர்ந்த மயிரினை நீக்கியிருந்தாள்

இதழ் சுவைப்பதையோ வாய்ப்புணர்ச்சியோ
விரும்பாதள் உதட்டுச்சாயத்தில்
தன் வெறுப்பை ஒழித்துவைத்தாள்

உடலையிறுக்கும் ஆடையினை
பலமுறையுடுத்தி தசைகள் பிதுங்குவதை
ஏற்றுக்கொள்ள ஆயத்தமானாள்

ஒரு கோப்பை மதுவருந்தி
சுயம் தொலைத்து
கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டாள்

ஆளுக்கேற்ற விலை நிர்ணயத்தின்
லாவகம் கற்றதை
மீண்டுமொருமுறை நினைத்துக்கொண்டாள்

பிரம்புகளின் வீச்சில் களிம்பு பூசி
அழுததன் அடையாளம் அறியாதிருக்க
முகம் கழுவி வர்ணம் பூசிக்கொண்டாள்

கடைசியாய் நீளப்படத்தின்
காட்சிகளை விழிகளில் வழியவிட்டு
குடும்பத்தை, தோழிகளை கண்களில் நிறுத்திக்கொண்டாள்

சீறுடை மறந்த சிறுமியவள்
வீதியிறங்கி
தொழிலுக்கு ஆயத்தமானாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets