Pin It

Widgets


நாவால்
உயிரறத்து விளையாடும்
சொன்னதை சொல்லும் கிளி ஒன்று

ஒரு பொழுதும் நம்பாதிருந்தது
அவனுடனான உறவையும்
சூழலையும் சுற்றத்தையும்

ஏதோ ஒரு பொழுதில்
நிகழ்ந்திடும் சண்டையினை
அடுத்த பொழுதில் தீர்த்திருந்தது

பிணக்குகளின் ஊடே உழலும்
உரையாடல்கள்
மென்று கொண்டிருந்தது நம்பிக்கையை

மழை காய்ந்த ஒரு வெயில் பொழுதில்
விடை பெறுதல் பற்றியும்
வழியனுப்பதல் பற்றியுமான விவாதத்தில்

நாவால்
உயிரறத்து விளையாடும்
சொன்னதை சொல்லும் கிளி சொல்லிக்கொண்டிருந்தது

நீ முன்பு போல் இல்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets