Pin It

Widgets

நெருஞ்சிக்காட்டில்
உடல் கிழிபடாமல் புணரும்
பாம்புகளிரண்டு கனவில்

மேலெழும்பி ஆடுவதற்கு

தரையூன்றிய வாலில்
காமத்தின் மொத்த தூண்

முத்தப் பரிமாற்றத்தில்
நழுவிய எச்சில் விசத்தில்
நீலமாகின சங்குப்பூக்கள்

பாம்பின் சாயலில்
நீளும் அதன் கொடியில்
பச்சைநிறத்திலொரு பாம்பு

கால்தடமில்லா
குளத்தின் மற்றுமொரு பாதையில்
நெளியும் இடையோடு

செப்புக்குடம் கொண்டு
தாமரைக்கொடி விலக்கிக்கொண்டிருந்தாள்
முந்தானை சுருங்கிய மார்போடு

செம்மன் உறைந்த முற்றத்தில்
தெளித்த நீர் சிதறலில்
நேற்றைய கனவின் கலவி வாசனை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets