Pin It

Widgets


அவனை கொலை செய்ய
நெருங்கும் வேளையில்
வெளிப்படும் குரலோசையை

அழுகையில் கெஞ்சும் பொழுது
பயத்தில் அலறும் பொழுது என
முன்னமே யூகித்து வைத்திருந்தேன்

தாக்க துணிந்து கத்துவதையும்
உதவி கேட்டபடி ஓடும் பொழுதும்
எப்படி சிரிக்க வேண்டுமென

நிசப்தம் நிறைந்த பொழுதில்
கண்ணாடி முன்னின்று
சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டேன்

தூக்கம் தொலைந்த
இரக்கமற்ற சாமத்தில்
உயிரற்ற உடலை காண்கிறேன்

அகால மரணமென்ற செய்தியில்
அவன் புகைப்படம் பதித்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்

அவனைக்கொன்றதற்காக
அழுது கொண்டிருக்கிறேன் தூரத்திலொரு
பாதிரியாரின் வாசகம் கேட்டது

கர்த்தரே எங்கள் பாவங்களை மன்னியும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets