Pin It

Widgets


வீட்டின் மூலையில் குவித்திருந்த
வெட்டிய ஆப்பிள் தோல்களின் நடுவே
விதையெடுத்துக் கொண்டாள் பொன்ராணி

மதியம் தாண்டிய வேளையில்
யாவரும் கண்ணுறங்க
நீர் நிரப்பிய குவளையோடு

அடுப்பு குப்பைகளும்
எஞ்சிய பசுவின் சானங்களும் நிறைந்த
கொல்லைப்புரத்தில் விதைத்திருந்தாள்

ஒவ்வொரு மாலையும்
சீறுடை களையும் முன்னமே
நீருற்ற சென்றுவிடுவாள் ஆப்பிள் விதைக்கு

கோழிகள் கிளறிவிடாதிருக்க
காய்ந்த முட்களை
விதைவிழுந்த இடம்படாது போட்டிருந்தாள்

பாட்டிவீடு தங்கிவந்த ஒரு காலையில்
ஆப்பிள் முளைவிட்டிருந்தது
ஆரஞ்சு பதியத்தில் அம்மாவின் அன்பில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets