வீட்டின் மூலையில் குவித்திருந்த
வெட்டிய ஆப்பிள் தோல்களின் நடுவே
விதையெடுத்துக் கொண்டாள் பொன்ராணி
மதியம் தாண்டிய வேளையில்
வெட்டிய ஆப்பிள் தோல்களின் நடுவே
விதையெடுத்துக் கொண்டாள் பொன்ராணி
மதியம் தாண்டிய வேளையில்
யாவரும் கண்ணுறங்க
நீர் நிரப்பிய குவளையோடு
அடுப்பு குப்பைகளும்
எஞ்சிய பசுவின் சானங்களும் நிறைந்த
கொல்லைப்புரத்தில் விதைத்திருந்தாள்
ஒவ்வொரு மாலையும்
சீறுடை களையும் முன்னமே
நீருற்ற சென்றுவிடுவாள் ஆப்பிள் விதைக்கு
கோழிகள் கிளறிவிடாதிருக்க
காய்ந்த முட்களை
விதைவிழுந்த இடம்படாது போட்டிருந்தாள்
பாட்டிவீடு தங்கிவந்த ஒரு காலையில்
ஆப்பிள் முளைவிட்டிருந்தது
ஆரஞ்சு பதியத்தில் அம்மாவின் அன்பில்!
நீர் நிரப்பிய குவளையோடு
அடுப்பு குப்பைகளும்
எஞ்சிய பசுவின் சானங்களும் நிறைந்த
கொல்லைப்புரத்தில் விதைத்திருந்தாள்
ஒவ்வொரு மாலையும்
சீறுடை களையும் முன்னமே
நீருற்ற சென்றுவிடுவாள் ஆப்பிள் விதைக்கு
கோழிகள் கிளறிவிடாதிருக்க
காய்ந்த முட்களை
விதைவிழுந்த இடம்படாது போட்டிருந்தாள்
பாட்டிவீடு தங்கிவந்த ஒரு காலையில்
ஆப்பிள் முளைவிட்டிருந்தது
ஆரஞ்சு பதியத்தில் அம்மாவின் அன்பில்!
0 comments
Post a Comment