Pin It

Widgets


பாலைவன மணல் திட்டில்
மடிந்து கிடக்கும்
கிழக்கு நோக்கிய நிழலில்

இறையில்லா பாம்பொன்று
ஊர்ந்துகொண்டிருந்தது
வெயில் மறையும் திசை நோக்கி

தணிந்துவிடாத மணல் சூட்டில்
உட்புகமுடியா உடலினை
சபித்துக்கொண்டே பயணித்தது

அதன் துயர் தாங்காது கால் கவ்விய
கழுகின் செயலினை
பாவக்கணக்கில் சேர்த்துக்கொண்டார் கடவுள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets