Pin It

Widgets

தனிமை

Monday, October 29, 2012 | 0 comments »


காட்சிப்பொருளாகிப்போன
அவள் விழிகளுக்கு
ஏனோ சுதந்திரமில்லை

நினைத்த நேரத்தில்
நனைத்த இடத்திலெல்லாம்
அழுதுவிட முடியாது

ததும்பிடும் நீரினை
ஒன்றாய் கூடிய உணவு மேசையிலோ
கணவனோடு கூடிய நடைபயிற்சியிலோ

சட்டென உடைத்துவிட முடியாது
கண்களின் சிவப்பானது
பலநூறு கேள்விக்கனைகள்

இதய சுரபி சுரக்கும் நேரத்தினை
என்னவென கனித்திடமுடியாதவள்
விழியுருட்டியபடி

காதுக்குள் இசை சேர்க்கிறாள்
வெடித்து அழ முடியாத உதட்டின் துடிதுடிப்பு
பார்ப்பவர்களுக்கு பாடலின் முணுமுணுப்பு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets