Pin It

Widgets


பிறகு எப்பொழுதாவது
மழைக்கான அறிகுறி தெரியும்போதே
தகவல் சொல்லிவிடு

உன்னை வந்தடைவதற்குள்
மேகம் கலைந்து
மழை பொய்த்துவிட நேரிடலாம்

ஒரு கோப்பை தேநீர் கொடு
மெல்லிசை ஒன்றை இசைக்கவிடு
சற்று நேரம் காத்திருக்க வை

காத்திருக்க வைத்ததற்காக வருத்தம் கொள்
பரவாயில்லையென்றதும் புன்னகை செய்
அப்புறமென்று உரையாடல் துவங்கு

ஈரக்கூந்தலை எதிரில் நின்று
நீர் உலர்த்து
சாரலில் நனைந்து கொள்கிறேன்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets