Pin It

Widgets

எப்படியும் வாங்கிவிடுவாள்-அவளின்
கருங்கூந்தல் நிறம் பூசிய சிலேட்டில்
ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு

வண்ண வண்ணமாய் ஆடையிருக்கையில்

சீருடையில்-அவளோ
அங்குமிங்கும் நடந்துத்திரியும் பட்டாம்பூச்சி

காற்றினில் கலந்திட்ட குரலானது
காதுகளில் எட்டாத இவ்வேளையில்
இரட்டை ஜடை வரத்தவறுவதில்லை கண்முன்

மாலை ஒலிக்கும் மணியோசையில் ரசிக்கும்
எவளுக்கும் வாய்க்காதொரு உதடு
அதற்கு மேலொரு மச்சம்

அந்தப்பறவை உதிர்த்த இறகு ஒன்று
என் விட்டத்தில்
இப்படி கிறுக்கிக்கொண்டிருக்கிறது

பருவம் எட்டியிருப்பாள்
படிப்பு முடித்திருப்பாள்
மனமாகியிருப்பாள்
தாயாகியிருப்பாள்...

அன்று முகவரி அறியவிரும்பவில்லை
அவள் வீடுதேடி
கால்கள் நடக்கவில்லை

இன்று மனமோ தேடிக்கொண்டிருக்கிறது
அவள் பெயரோடு கூடிய முகம்
முகநூலில் கிட்டிவிடாதாவென்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets