Pin It

Widgets

ஆமென்

Monday, October 29, 2012 | 0 comments »


அடர் சோகத்தில் தொடர் ராகமாய்
முந்தைய இரவின் தேடலையும்
இன்றைய இதயக் குமுறல்களையும்

மெளனத்தின் துணையோடு
கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
யாருக்கும் பேச்சுக் கொடுக்காமல்

முன்பொருமுறை சூட்டிய
இதயமற்றவன் பட்டத்தினை
கட்டிக்காக்கிறது கண்கள்

பார்வையில்லா பறவையொன்று
இறக்கைக்கு ஓய்வு வேண்டுவது போல
எனக்கொரு இளைப்பாருதல் வேண்டும்

ஆண்டவரே எனக்கொரு தனிமையும்
அழுவதற்கும் சொல்லித்தாருங்கள்
ஆமென்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets