Pin It

Widgets

மழை...

Monday, October 29, 2012 | 0 comments »


நீ
காக்காகடி கடிக்கவும்
ஒரு மழை
தேவைப்பட்டிருக்கிறது....
ஒரு சாக்லேட் இரண்டு துண்டுகளாய்

நீயோ மழை நிற்காதாவென
புலம்பினாய்
மழை நின்றுவிடக்கூடாதென
வேண்டினேன்
நல்லவேளை மழை நின்றும்
என் கைவிடவில்லை நீ!

சுடிதார் நனைவதாய்
தோள்பற்றி பின்சென்றாய்
உன் தேகச்சூட்டினை
பொழிந்தது மழை!

நனைந்துவிடாமலிருக்க
என்னிடம் விட்டுசென்ற
நோட்டினை
இரவுமுழுவதும் புரட்டிவிட்டேன்
பக்கமெல்லாம் நீ!

நனைந்திடவும்
மழை கண்டு ஒதுங்கிடவும்
துணைக்கு நீ வேண்டும்
நாய் தன் குட்டிகளை காப்பதுபோல!

நேரம் கடந்துவிட்டதாய்
நகம் கடித்துக்கொண்டிருக்கிறாய்
பிறை நிலாக்களே
மழையானதாய் எண்ணமெனக்கு!

இனி எப்போதும் நனைவதிற்கில்லை
உன் துப்பட்டா துவட்டலில்லா
மழைத்துளிகள் பாரமெனக்கு!

கடைசியாய் விட்டுச்சென்ற
முத்த சத்தத்தை தேடியலைகிறேன்
மழையின் ஓசையில்

நனையலாமா என்று கேட்ட
உன் அனுமதியில்
பெய்யத்துவங்கியது காதல்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets