Pin It

Widgets

உதிர்ந்த சோளத்தின்
தட்டை நிறத்திலிருந்தது
கருவிழி மிஞ்சிய பகுதிகள்

எதார்த்தமாகவே

எந்த நேரத்திலும் உடைவதுபோல
தேங்கியே இருந்தது விழிகளில் நீர்

அந்த கண்களுக்கு பேசவோ
சிரிக்கவோ உணர்வுகளை உதிர்க்கவோ
தெரியாதது போலவேயிருந்தது

உணவுக்கு அமரும்
கோயில் மரத்தடியின் குடிநீர்குழாய்
பார்த்தபடி வெறித்திருந்தது கண்கள்

சொட்டு சொட்டாய் நிறையும்
தண்ணீர் பாட்டிலுக்கும்
உணவருந்தும் காலத்திற்கான இடைவெளியில்

அமைதியுற்றிருந்தது அவரின்
ஜவ்வுமிட்டாய் விற்பனைக்கான
சமிக்ஞையொலி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets