உதிர்ந்த சோளத்தின்
தட்டை நிறத்திலிருந்தது
கருவிழி மிஞ்சிய பகுதிகள்
எதார்த்தமாகவே
தட்டை நிறத்திலிருந்தது
கருவிழி மிஞ்சிய பகுதிகள்
எதார்த்தமாகவே
எந்த நேரத்திலும் உடைவதுபோல
தேங்கியே இருந்தது விழிகளில் நீர்
அந்த கண்களுக்கு பேசவோ
சிரிக்கவோ உணர்வுகளை உதிர்க்கவோ
தெரியாதது போலவேயிருந்தது
உணவுக்கு அமரும்
கோயில் மரத்தடியின் குடிநீர்குழாய்
பார்த்தபடி வெறித்திருந்தது கண்கள்
சொட்டு சொட்டாய் நிறையும்
தண்ணீர் பாட்டிலுக்கும்
உணவருந்தும் காலத்திற்கான இடைவெளியில்
அமைதியுற்றிருந்தது அவரின்
ஜவ்வுமிட்டாய் விற்பனைக்கான
சமிக்ஞையொலி!
தேங்கியே இருந்தது விழிகளில் நீர்
அந்த கண்களுக்கு பேசவோ
சிரிக்கவோ உணர்வுகளை உதிர்க்கவோ
தெரியாதது போலவேயிருந்தது
உணவுக்கு அமரும்
கோயில் மரத்தடியின் குடிநீர்குழாய்
பார்த்தபடி வெறித்திருந்தது கண்கள்
சொட்டு சொட்டாய் நிறையும்
தண்ணீர் பாட்டிலுக்கும்
உணவருந்தும் காலத்திற்கான இடைவெளியில்
அமைதியுற்றிருந்தது அவரின்
ஜவ்வுமிட்டாய் விற்பனைக்கான
சமிக்ஞையொலி!
0 comments
Post a Comment