என்னை சாகச்சொல்லி
எவனோ ஒருவன் உள்ளிருந்து
தூண்டிக்கொண்டேயிருக்கிறான்
உயிரின் வடிவமானது
எவனோ ஒருவன் உள்ளிருந்து
தூண்டிக்கொண்டேயிருக்கிறான்
உயிரின் வடிவமானது
இரத்த நிறத்தில் வேண்டுமா
துடிதுடிப்பில் வேண்டுமா என்றால்
நீ சாகவேண்டும்
அவ்வளவே என்கிறான்
நான் மட்டும் கேட்கும் குரலில்
துயர் மிகுந்த பாடலையோ
வரியில்லா இசையோ
அமைதியோ விரும்பவில்லை அவன்
ஒரு குறிப்பெழுதவும்
அனுமதிக்க மறுக்கிறான்
குரல்வளையில் அமர்ந்திருக்கிறான்
எங்கே உடைந்துஅழுது
நான் மீண்டுவிடுவேனோ
என்ற பெரும் அச்சம் அவனுக்கு
இருளை வெறுக்கிறான்
வெளிச்சம் தவிர்க்கிறான்
மின்விளக்கின் சூட்டில் தவிக்கும்
நிறமிழந்த பட்டாம் பூச்சி ஒன்றின்
துடிப்பை அதன் இறக்கை அசைப்பை
சாகும் விதத்தை ரசிக்கிறான்
அறையின் சூட்டில் நனையும்
உடலை நள்ளிரவில் நீர் நனைத்து
கொன்றுவிட துடிக்கிறான்
யாரும் பேச்சு கொடுத்துவிடாதிருக்க
எப்போதும் இனம் புரியா
துயரத்திலமர்த்தி ரசிக்கிறான்
புத்தக திறப்போ கண் மூடலோ
நிகழ்ந்திடாதிருக்க
இரவெல்லாம் கவனமுடன் இருக்கிறான்
இயற்கையை ரசித்துவிடுவேனோவென்று
பெரிதும் அச்சம் கொண்டு
என் கால்களை கட்டிப்போடுகிறான்
கனவுகளின் எண்ணிக்கை கூட்டுகிறான்
அது நிகழ்ந்திடாதிருக்க துன்பமுற
சிந்தனை சித்தரவதை செய்கிறான்
அடிக்கடி பெருவிரல் கட்டு நடனமென
கண்முன்னே நிறுத்துகிறான்
ஒப்பாரி கேட்க செய்கிறான்
பாதையில்லா பயணத்தை
காட்சிகளாக்குகிறான்-நான்
எங்கோ நடப்பது போல காட்டிக்கொல்கிறான்
என் பலவீனம் தேடுகிறான்
விலங்குகள் மீது மட்டும்
இரக்கமுள்ளவனாய் இருக்க செய்கிறான்
கண்ணாடி பிம்பம் உடைத்து
முகத்தை ரசித்திடாதிருக்க
எல்லா காலையும் துயர் ஏற்றுகிறான்
புழுக்கள் நெழியும் உடல்
சிதைந்த மாலை நாறும் ஊதுபத்தி
யாவும் மழையில் வேண்டுமென அலைகிறான்
எதற்கும் இணங்க மறுக்கிறான்
மதுவோ மாதுவோ ஒரு கோப்பையில்
தாகம் தீர்ப்பவன் போலில்லை
அவனுக்கு நான் சாக வேண்டும்
செல்லரித்து செல்லரித்து
தினம் தினம் சாக வேண்டும்
துடிதுடிப்பில் வேண்டுமா என்றால்
நீ சாகவேண்டும்
அவ்வளவே என்கிறான்
நான் மட்டும் கேட்கும் குரலில்
துயர் மிகுந்த பாடலையோ
வரியில்லா இசையோ
அமைதியோ விரும்பவில்லை அவன்
ஒரு குறிப்பெழுதவும்
அனுமதிக்க மறுக்கிறான்
குரல்வளையில் அமர்ந்திருக்கிறான்
எங்கே உடைந்துஅழுது
நான் மீண்டுவிடுவேனோ
என்ற பெரும் அச்சம் அவனுக்கு
இருளை வெறுக்கிறான்
வெளிச்சம் தவிர்க்கிறான்
மின்விளக்கின் சூட்டில் தவிக்கும்
நிறமிழந்த பட்டாம் பூச்சி ஒன்றின்
துடிப்பை அதன் இறக்கை அசைப்பை
சாகும் விதத்தை ரசிக்கிறான்
அறையின் சூட்டில் நனையும்
உடலை நள்ளிரவில் நீர் நனைத்து
கொன்றுவிட துடிக்கிறான்
யாரும் பேச்சு கொடுத்துவிடாதிருக்க
எப்போதும் இனம் புரியா
துயரத்திலமர்த்தி ரசிக்கிறான்
புத்தக திறப்போ கண் மூடலோ
நிகழ்ந்திடாதிருக்க
இரவெல்லாம் கவனமுடன் இருக்கிறான்
இயற்கையை ரசித்துவிடுவேனோவென்று
பெரிதும் அச்சம் கொண்டு
என் கால்களை கட்டிப்போடுகிறான்
கனவுகளின் எண்ணிக்கை கூட்டுகிறான்
அது நிகழ்ந்திடாதிருக்க துன்பமுற
சிந்தனை சித்தரவதை செய்கிறான்
அடிக்கடி பெருவிரல் கட்டு நடனமென
கண்முன்னே நிறுத்துகிறான்
ஒப்பாரி கேட்க செய்கிறான்
பாதையில்லா பயணத்தை
காட்சிகளாக்குகிறான்-நான்
எங்கோ நடப்பது போல காட்டிக்கொல்கிறான்
என் பலவீனம் தேடுகிறான்
விலங்குகள் மீது மட்டும்
இரக்கமுள்ளவனாய் இருக்க செய்கிறான்
கண்ணாடி பிம்பம் உடைத்து
முகத்தை ரசித்திடாதிருக்க
எல்லா காலையும் துயர் ஏற்றுகிறான்
புழுக்கள் நெழியும் உடல்
சிதைந்த மாலை நாறும் ஊதுபத்தி
யாவும் மழையில் வேண்டுமென அலைகிறான்
எதற்கும் இணங்க மறுக்கிறான்
மதுவோ மாதுவோ ஒரு கோப்பையில்
தாகம் தீர்ப்பவன் போலில்லை
அவனுக்கு நான் சாக வேண்டும்
செல்லரித்து செல்லரித்து
தினம் தினம் சாக வேண்டும்
0 comments
Post a Comment