Pin It

Widgets


என் ரேகைகளுக்குள்
ஒளித்து வைத்திருந்தேன்
கனவுகளையும் கற்பனைகளையும்

நிமிடத்தில் நிகழும் விழிப்பேச்சு
நடுநிசிவரை நீளும் உரையாடல்
இருவர் அறியாமலும் உறங்கிப்போதல்

எது எது என்னவென நீண்ட பட்டியலில்
நீ சிறு புள்ளியாகவுமில்லை
புள்ளியில் பிம்பமாகவுமில்லை

வடிவமற்ற என் உணர்வுகளை
அர்த்தமற்ற பல இரவுகளில்
பொருத்தியிருக்கிறேன் நீ இல்லாததால்

உன் வருகைக்குப்பின்னதான
என் கனவுடைத்தலில்
நீ மும்மரமாயிருந்தாய் முனைப்போடிருந்தாய்

உனக்கும் எனக்குமான உறவின் பெயரினை
மாங்கல்யமாய் குங்குமமாய்
ஊராருக்கு காட்டிக்கொண்டாயே அன்றி எனக்கோ

நீ வந்ததில் சந்தோசமுமில்லை
நீ சென்றதில் வருத்தமுமில்லை

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets