Pin It

Widgets


விடைபெறுதலின் ஞாபகார்த்தமாய்
முத்தமொன்றும்
முடிவுறா கவிதையொன்றும் கேட்டாள்

மல்லிகைப்பூவின் இதழொத்த
கரத்தினை சற்று இறுக்கிப்பிடிக்க
இதழசுழித்து பறித்துக்கொண்டாள்

பிரிதலின் நிமித்தமாய்
கொஞ்ச நேரம் பேசியிருக்க அழைக்கையில்
அழுதுவிடுவேன் என நழுவினாள்

தலை தாழ்த்தியே கிடக்கும்
முகத்தினை என்னைப்பாரென கேட்க
உடைந்து கிடந்த கண்ணீரைத் துடைக்கிறாள்

பின்னெப்பொழுதாவது அலைபேசியில்
பேசுவதற்கு சம்மதிப்பாயவென கேட்க
என்னை விட்டுடாவென கெஞ்சத்துவங்கினாள்

காத்திருப்பின் இடைவெளிகள் தீர்ந்துவிட,
வந்து சென்றவளின் ஒருவரிக்கவிதை
அவள் என்பவள் எண்ணத்தில் அடங்காதவள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets