Pin It

Widgets

பிடிவாதம்

Monday, October 29, 2012 | 0 comments »


ஓங்கிய காற்றில் பொழியும்
மழைத்தூவானம்
அறை நிரப்பிக்கொண்டிருந்த இரவு அது

காற்றில் மோதி சத்தமிடும் கதவை
தாழிட மனமில்லா அளவிற்கு
குறுஞ்செய்தியில் லயித்திருந்தது கைககள்

கனவில் வந்துபோன வெற்றுக்கால்கள்
நினைவில் வர -உனக்கு
கொலுசு பிடிக்குமா என்றொரு கேள்வி

குறுஞ்செய்தியின் நுன்னிய சத்தத்தின் நடுவே
கேட்டுவிடச்சொல்லி தோற்றுக்கொண்டேயிருந்தது
இனிய இரவு என்று சொன்ன பின்பும்...

வெற்றுக் குருஞ்செய்தியோ பெயர் மட்டுமோ
பாதி தூக்கத்தில் அனுப்பிட மாட்டாளாவென
தூங்காமல் காத்திருக்கிறது மனது

இருவருக்குமான கயிறு இழுத்தல் போட்டியில்
காதலெனும் கட்டெறும்பு
உன்னைக்கடித்துவிடாதெவென்றே கடக்கிறது இந்த இரவும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets