பிரிவுக்குப்பின் நிகழ்ந்த
நேற்றைய இரவின் கோடுகிழிப்பில்
குருதியெங்கும் உன் வாசனை
அன்றொரு நாள் உனையறியாதெடுத்த
நேற்றைய இரவின் கோடுகிழிப்பில்
குருதியெங்கும் உன் வாசனை
அன்றொரு நாள் உனையறியாதெடுத்த
வியர்வை வாசம் நிறைந்த
கைக்குட்டையின் பின்புலத்தினை
விழி நீர் துடைக்கையில்
மார்பினில் விழுந்த
ஒரு சொட்டு இரத்தம் இம்சிக்கிறது
ஒரு முத்தத்திற்காக
நெருங்கித்தோற்ற பேருந்துபயணமன்று
பயணச்சீட்டின் பின் குறிப்பில்
நீ ஒட்டி வைத்த சுயீங்கம்
என் உளறல்களை
தற்காலிகமாய் நிறுத்திக்கொண்டது
இரவுகளில் தொலையத்துவங்கும்
என் மீதான என் பற்று
உன் நினைவுகளில் ஆறுதலடைகிறது
எங்கேனும் உனை காண நேர்ந்தால்
அயல் தேசத்து பறவைப்போல
அருகிலமர வரம் வேண்டுமெனக்கு!
கைக்குட்டையின் பின்புலத்தினை
விழி நீர் துடைக்கையில்
மார்பினில் விழுந்த
ஒரு சொட்டு இரத்தம் இம்சிக்கிறது
ஒரு முத்தத்திற்காக
நெருங்கித்தோற்ற பேருந்துபயணமன்று
பயணச்சீட்டின் பின் குறிப்பில்
நீ ஒட்டி வைத்த சுயீங்கம்
என் உளறல்களை
தற்காலிகமாய் நிறுத்திக்கொண்டது
இரவுகளில் தொலையத்துவங்கும்
என் மீதான என் பற்று
உன் நினைவுகளில் ஆறுதலடைகிறது
எங்கேனும் உனை காண நேர்ந்தால்
அயல் தேசத்து பறவைப்போல
அருகிலமர வரம் வேண்டுமெனக்கு!
0 comments
Post a Comment