Pin It

Widgets


பிரிவுக்குப்பின் நிகழ்ந்த
நேற்றைய இரவின் கோடுகிழிப்பில்
குருதியெங்கும் உன் வாசனை

அன்றொரு நாள் உனையறியாதெடுத்த
வியர்வை வாசம் நிறைந்த
கைக்குட்டையின் பின்புலத்தினை

விழி நீர் துடைக்கையில்
மார்பினில் விழுந்த
ஒரு சொட்டு இரத்தம் இம்சிக்கிறது

ஒரு முத்தத்திற்காக
நெருங்கித்தோற்ற பேருந்துபயணமன்று
பயணச்சீட்டின் பின் குறிப்பில்

நீ ஒட்டி வைத்த சுயீங்கம்
என் உளறல்களை
தற்காலிகமாய் நிறுத்திக்கொண்டது

இரவுகளில் தொலையத்துவங்கும்
என் மீதான என் பற்று
உன் நினைவுகளில் ஆறுதலடைகிறது

எங்கேனும் உனை காண நேர்ந்தால்
அயல் தேசத்து பறவைப்போல
அருகிலமர வரம் வேண்டுமெனக்கு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets