Pin It

Widgets

கோடை நிலவு

Monday, October 29, 2012 | 0 comments »

நீ தனித்துவிடப்பட்டிருப்பதாய்
என் தீவு மூங்கில்கள்
கூட்டமாய் வந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன

ஆடை சூழாதிருக்கும் அங்கத்தினை

குறிப்பெடுத்து சொல்லிப்பார்க்கின்றன
தொழில் பழகும் தையல்காரன் போல

கிளையொடித்து சாறுபிழிந்து
என் இரு கைகளிலும்
குறிப்பெழுதி செல்கின்றன

பறவைகள்கூட உன்னைப்பற்றித்தான்
பாடுகின்றனவென்றும் அதன்மொழி
தங்களுக்கு புரிவதாகவும் இம்சிக்கின்றன

அந்த கடலைப்பார்
உன் மேலுள்ள மோகத்தில்
அங்குமிங்குமாய் அலைகிறது என்கின்றன

மனிதர்களின் மொழியறியா இயற்கைக்கு
எப்படி புரியவைப்பேன்
குளிப்பது கோடை நிலவென!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets