Pin It

Widgets


உப்பு மூட்டை தூக்கவேண்டுமென்று
அடம் பிடித்தாள்
மதியம்கழிந்த பொழுதொன்றில்

தூக்கத்திற்கு அலையும் விழிகளில்
தன் முகத்தினை
பதியம் வைத்து காத்திருந்தாள்

எந்தப்பக்கம் புரண்டு படுத்தாலும்
கெஞ்சத்துவங்கினாள்
மழலை எடுப்புக்கு ஏங்குவது போல

வில்லாய் மடிந்து கழுத்தைக் கட்டியவளை
பின்பக்கம் வாடி என்றால்
கொஞ்சநேரமென கெஞ்சினாள்

அடிபோடி என்று நழுவினால்
காலிலேறி நடவென்று
கண்களால் நடனமாடினாள்

மெத்தையாவது அவளோ நானோ
முத்தத்தில் முந்திக்கொண்டது
முரண்டுபிடித்த உதடு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets