Pin It

Widgets

மிருகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவுகளின் பயணத்தோடு
கூடடைந்த மொழியறியா தேசத்தில்
சன்னல்வழி காட்சிகள் ரசிக்க இயலவில்லை

சாளரங்களின் முகஉரசல்கள்
உன் உலர்ந்த கூந்தலை
முன்னிருத்தி இம்சித்தன

மங்கலான விளக்கு வெளிச்சத்தில்
உன் நெற்றிவியர்வைக்கு அலைந்தது
எல்லை மீறிய கண்கள்

பெண்ணொருத்தி ஆடவனின்
வருகைக்காக காத்திருப்பது போன்ற
ஓவியத்தினை சுவற்றில் கண்டதும்

உன்னிடமிருந்து விடைபெறுகையிலிருந்த
உன் முகபாவனையை அதில் பதித்து,
ஆறுதலடைந்தது என் மிருகம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets