Pin It

Widgets

துரோகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவினை பட்டாம்பூச்சியென
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்
என் மனமெனும் பேரேட்டில்

சன்னலயே சார்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிக்கு சாளரங்களின்
உரசல்கள் ஏனோ பிடிப்பதேயில்லை

சாலையை நோக்கி விழித்தேயிருக்கும்
கண்களில் விழும் பிம்பங்கள்
புழுவென நகர்ந்துகொண்டேயிருக்கின்றன

எச்சில் விழுங்குவதையோ உமிழ்வதையோ
எக்கனமும் விரும்புவதேயில்லை
சிலைபோல பாவித்துக்கொள்கிறது

வெயில் பொழியும் பொழுதில்
துணையிருக்கும் கரடிபொம்மையின்
ப்ருத்தி மயிரை வருடிக்கொண்டேயிருக்கிறது

அறை,உடை, கண்ணாடி,
மாதவிலக்கு துணியென அப்பட்டாம்பூச்சி
சதா இம்சித்துக்கொண்டேயிருக்கின்றது

துரோகம் ததும்பும் வேளையில்
கொன்றுவிடலாமென்றால்
உடலென்பது உடல் மட்டுமில்லையே!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets