Pin It

Widgets

சாபம்

Monday, October 29, 2012 | 0 comments »

ஏதுமற்றதாய்
உணரும் தருணங்களில்
தீர்ந்துபோன பவுடர் டப்பாவிற்குள்

கரைந்துபோன கண்மை

பென்சிலை நுழைத்து
அறையெங்கும் ஒலிக்கச்செய்கிறாள்

சாதகமாய் காட்டி நிற்கும் கன்னம்
உதட்டோடு உதடு முத்தம் என
எதுவும் வாய்க்காத இரவுகளில்

தன் குட்டிகளை தொலைத்த
பூனையாய்
அறைக்குள் உலவுகிறாள்

தலையணையின் நுனி அதனை
விட்டு விட்டு கடித்து இழுத்து
ஏதுமற்றதன் எண்ணம் சுவைக்கிறாள்

அழுகைக்கான காரணமின்றி
எப்படி அழுகிறேனென
கண்ணாடில் பிம்பம் உடைக்கிறாள்

குளத்து மீனை கவ்விச்செல்லும்
பறவை போல
எதிர்பாராத விபத்தொன்றிற்கு காத்திருக்கிறாள்

அது மரணமாகயிருக்கலாம்
சுயநினைவினை தொலைக்கலாம்
எதிர் வீட்டுக்குழந்தையின் முத்தமாகயிருக்கலாம்

அல்லது

நேற்றைய கனவில்
ஒரு வாய் சோறுட்டிப்போனதாய் சொன்ன
பிறக்காத பிள்ளையின் பெயர்சூட்டுவிழாவாகயிருக்கலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets