Pin It

Widgets

எல்லா இரவுகளிலும் மனமெனும் மதிலில்
மல்லிக்கொடியில் கவலைதொடுத்து
வந்தமரும் ஒரு பூனை

இரவின் நிறத்தினையொத்த

அப்பூனையானது
முந்தைய இரவின் தேடலையும்

இன்றைய விரக்தியின் உச்சத்தையும்
துண்டுதுண்டுகளாக்கி
தனக்கு ஏதுவாக சிதைக்கத்துவங்கியிருக்கும்

பெருமழையில் இலையடர்ந்த
வேப்பமரமொன்றின்
நிலவினில் ஆடும் கரும்பச்சையிலைகள்

அழுதுவிடு
என வேண்டுவது போலிருக்கும்

வெயில் இறங்கிய தார் சாலையின்
பின்னிரவுகளில்
மஞ்சளாய் படரும் விளக்கொளி,

கசிவேதுமின்றி
இதயத்தை கவ்விப்பிடிப்பது போலிருக்கும்

மரணத்தின் தேடல் விரும்பாமல்
உதடுகள் மெளனித்து உள்ளத்தில் சிதைவுரும்
யாவருக்கும் எளிதில் கிடைத்துவிடுகிறது

அவன்(ள்) ஒரு தனிமை விரும்பி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets