இருளை மட்டுமே யாசிக்கும்
என் விழிகளை
என்ன செய்வதாய் உத்தேசம்...
கேட்கும்திறன் தொலைக்க விரும்பும்
என் விழிகளை
என்ன செய்வதாய் உத்தேசம்...
கேட்கும்திறன் தொலைக்க விரும்பும்
என் காதுகளை
என்ன செய்வதாய் இருக்கிறாய்...
ஓ நினைவுகளே!
காலை
மாலை
இரவு
என்ற கூட்டிற்குள்ளிருந்து
நக இடுக்கில் ஊசி நுழைத்து
தசையறுத்து
மெது மெதுவாய் வலி பழக்கி
தேன் கூட்டினில் நூல் நுழைத்து
தேன் எடுப்பது போல
எனையறியாது எனையிழக்கசெய்தாய்
வரமும் சாபமுமாயிருந்த
பசி மறக்க செய்தாய்
தூக்கம் மறக்க செய்தாய்
திரளும் மேக உருவம்
மழையின் கருணை
அணைப்பின் வெதுவெதுப்பு
யாவற்றையும் தின்றுகுவித்து
கண்களின் வழியே
எல்லா பொழுதிலும் ஜீரணிக்க செய்தாய்
வாழ்தலுக்கான நிர்பந்தமின்றி
சுமந்துத்திரியும் உயிருக்கான உடலோ
உடலுக்கான உயிரோ
என் பிடிமானத்திலில்லா
என்னை, உன்னிடம்
மண்டியிட தயாராகயிருக்கிறேன்
கொன்றுவிடு
அல்லது
தற்கொலைக்கு பயிற்சிகொடு!
என்ன செய்வதாய் இருக்கிறாய்...
ஓ நினைவுகளே!
காலை
மாலை
இரவு
என்ற கூட்டிற்குள்ளிருந்து
நக இடுக்கில் ஊசி நுழைத்து
தசையறுத்து
மெது மெதுவாய் வலி பழக்கி
தேன் கூட்டினில் நூல் நுழைத்து
தேன் எடுப்பது போல
எனையறியாது எனையிழக்கசெய்தாய்
வரமும் சாபமுமாயிருந்த
பசி மறக்க செய்தாய்
தூக்கம் மறக்க செய்தாய்
திரளும் மேக உருவம்
மழையின் கருணை
அணைப்பின் வெதுவெதுப்பு
யாவற்றையும் தின்றுகுவித்து
கண்களின் வழியே
எல்லா பொழுதிலும் ஜீரணிக்க செய்தாய்
வாழ்தலுக்கான நிர்பந்தமின்றி
சுமந்துத்திரியும் உயிருக்கான உடலோ
உடலுக்கான உயிரோ
என் பிடிமானத்திலில்லா
என்னை, உன்னிடம்
மண்டியிட தயாராகயிருக்கிறேன்
கொன்றுவிடு
அல்லது
தற்கொலைக்கு பயிற்சிகொடு!
0 comments
Post a Comment