Pin It

Widgets


வார்த்தைகளற்ற பொழுதுகளில்
புறக்கணிப்பில் இழந்த சுயத்தை
மீட்பதற்கு தயார் படுத்துகிறேன்

நெஞ்சோரம் கூடுகட்டி நகம்கீறி
வலியுணர்த்தும் நேசப்பறவைகளின்
எண்ணிக்கை கூடுவது கண்டு

வற்றிய குளத்தில் விழும் ஒளியால்
செதில் செதிலாய் பிளப்பது போல
பிம்பங்கள் பட்டுப்பட்டு வெடிக்கிறேன்

கானலின் நீர் குடித்து தாகம் தீர்த்திட
அலையும் பாலைவன தேகத்தை
குளிக்க தயார் படுத்துகிறேன்

புள்ளிகளாய் விழும் துளிகளின் துவாரங்கள்
கள்ளிச்செடியின் கூரிய முட்களாய்
உடல் தொட்டு உயிர்குடிக்க

இயலாமையின் அறியாமை கண்டு
தடுமாறும் உதடுகள் வார்த்தை உதிர்க்காமல்
புன்னகையால் தையலிடுகிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets