Pin It

Widgets

நினைவுகள்

Monday, October 29, 2012 | 0 comments »

கல்லறை ஒன்றெழுப்பி
உன் நினைவுகளை முன்னிருத்தி
பனைமரத்தூன் சாய்ந்து
பருகிட முழுநிலவு இரவு வேண்டும்

நித்தமும் உன் நினைவைத்தவிர
வேறு நினைவற்றிருக்க வேண்டும்
இறந்திடாத உன் வருகைக்காக
காத்திருக்க வேண்டும்

மலரில்லா என் காட்டுக்குள்
மனமாக உன் மனம் வேண்டும்
வழிந்திடும் கண்ணீரில்
தினமும் வாசம் வீசிட வேண்டும்

அழுதிடக்கூடாதென்று
எண்ணுகிற எண்ணத்தில்
அனுதினமும் தோற்றிட வேண்டும்
அது நிகழ்ந்திடுமாயின் இறந்திட வேண்டும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets