Pin It

Widgets

இறங்கல்

Monday, October 29, 2012 | 0 comments »


கரையானுக்கு பதிலாய்
எறும்புகள் சில
ஊர்ந்து கொண்டிருந்தது உடலில்

வலி உணரும் வேளையில்
காதினை ஆட்டுவதையோ உடலசைவோ
நிகழட்டுமென நடைவேகம் குறைத்தேன்

எவ்வித அசைவுமில்லாததால்
அலுவலகம் நடக்கலானேன்
பூனை இறந்துவிட்டதென்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets