Pin It

Widgets

விடியலின்
கக்கத்தில் நீ
கண்களுக்குள் பசி

பற்பசை நுரையே
காணாத ஞாயிறு
சோப்பு நுரையில்

எச்சில் விழுங்கியே
கழியும் பொழுதானது
உன் எச்சில் உணவாய்

வாசல்படி
கடக்காத கால்கள்
மளிகை கடையேறும்

மடிக்கணினியும்
தொடுதிரையும் போய்
நீ மடியில்

எண்ணெய் பிசுக்குகள்
சுவரில் சித்திரமாகாது
சிற்றிடை படரும்

கத்தரியற்று
பற்களுக்குள் கடிபடும்
மீசை முடிகள்

அந்திச்சிவப்பினை
காணமுடிவாகி
ஆடைத்தேர்வில் நிலவாகும்

கைகோர்த்து தொடங்கும்
இரவின் நடை
கண்பேசி திரும்பும்

படுக்கை விரிப்பில்
நீல விளக்கும்
பின் நீல வானமும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets