Pin It

Widgets

உப்புக்காற்று சுவைக்கும்
தேகத்துளையினுள்
எப்போதும் பொருந்துவதில்லை

சோழியுருட்டும் கண்களின் வழி
ஊடுருவிய செயற்கை புன்னகையும்
அவசரகால ஆறுதலும்

இனி எப்போதும் கூடாதெனும்
முன்முடிவின் இறுதியில்
போர்க்களம் அமைக்கிறாய்

திரும்பிப்படுத்தல் குறித்து
சலமற்று இருப்பதாய் காட்டும் இரவில்
கேவுகிறது மெளனம்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets