Pin It

Widgets

இனியெப்போதும் வேண்டாமென்று
ஞாபகத்தின் தீண்டலயாய் கன்னத்தை
ரேகைகள் கிழிக்குமளவிற்கு

தண்டவாளக்கரையோர நடையில்
எச்சிலெட்டா தூரத்திலிருக்கும்
உதட்டால் முத்தமிடுகிறாய்

முனுமுனுக்கும் சொல்லின்
அர்த்தம் வேண்டுவதாயில்லை
அவரவர் மனப்பாங்குகிற்கு

அகன்ற வழியில் சக்கரம் சுழலா
தண்டவாளத்துருவின் ஈர வாசம்
புற்கள் மிதிபடும் ஓசை

திரும்புதல் குறித்தான பிரக்ஞை
காட்டிக் கொடுப்பதாயில்லை
நம்பிக்கையின் உதிர் சிறகுகள்

இன்னும் இறகுகளாகத்தானிருக்கிறது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets