உனக்கும் எனக்குமான பகடையாட்டத்தில்
மீண்டும் மீண்டும் காய் உருட்டுவதற்கான
வாய்ப்புகளை வழங்கிக்கொண்டேயிருக்கிறாய்
சர்பங்களின் கூடறிந்தவளாய் அல்லது
சர்பங்களை நீயே நிறுவியது போலவும்
மிக நெருக்கத்தில் விட்டு மீட்கிறாய்
என் இதயத்தசை சிக்கிய உந்தன்
கடவாய் பற்களின் துணுக்கெடுக்க-என்
விலா எலும்புகளையே பயன்படுத்துகிறாய்
உன்னைக் கேள்வி கேட்கும் நாளில்
ஊசிக்கம்பில் பூசைக்கு நுழைத்த சேவலின்
குருதி வழிவதுபோல நம்பிக்கையாய்
கேள்விகளின் மீதும் நம்பிக்கையின் மீதும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்
வாழ்தல் உனக்கென தீர்மானிக்கும் வரை
பசி தீர்ந்த ப்ரிதொரு நாளில்
உன் அசாத்திய சொற் கட்டுகளை
அதன் இணைப்பின் சுவடு தெரியாமல்
உனக்கான வாசலை வடிவமைத்து
என் சன்னலடைக்கிறாய் மீண்டும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்
மன்றாட்டுகளில் அடங்காத கடவுளின்
மனம் கொண்ட உன் பலிபீடத்தில்
இப்போது இரண்டாவது ஆடு
இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும்-இனி
உன் பலிபீடம் மேய்ச்சல் நிலமாகட்டும்
என் கண்ணீரில் முளைத்த புற்களால்
எதற்கும் தயாராய் இரு
என் மாமிசச்சுவையின் பின்புலம்
தெரியவரும் நாளொன்றில் மேய்ச்சல் ஆடு
நரியின் விழியோடு துரத்தலாம்
அங்கே ஒரு யுத்தம் தொடங்கும் வீடு தப்பி
காட்டுப்பூனையாகியிருக்கும் உனக்கும்
எதுவறியாமல் விழித்துக்கொண்ட நரிக்கும்
உன் ஓடுகால்கள் இளைப்பாற
முட்டிற்கு கைகொடுத்து குனியுமிடத்தில்
ஒழுகும் எச்சிலின் துளி விழாது பார்த்துக்கொள்
என் கல்லறையின் பசுமை கெடாதிருக்கட்டும்
எனதருமை துரோகத்தின் துவக்கமே
உனக்கான கடைசி உயிர் உடலற்று துயில்கிறது..
மீண்டும் மீண்டும் காய் உருட்டுவதற்கான
வாய்ப்புகளை வழங்கிக்கொண்டேயிருக்கிறாய்
சர்பங்களின் கூடறிந்தவளாய் அல்லது
சர்பங்களை நீயே நிறுவியது போலவும்
மிக நெருக்கத்தில் விட்டு மீட்கிறாய்
என் இதயத்தசை சிக்கிய உந்தன்
கடவாய் பற்களின் துணுக்கெடுக்க-என்
விலா எலும்புகளையே பயன்படுத்துகிறாய்
உன்னைக் கேள்வி கேட்கும் நாளில்
ஊசிக்கம்பில் பூசைக்கு நுழைத்த சேவலின்
குருதி வழிவதுபோல நம்பிக்கையாய்
கேள்விகளின் மீதும் நம்பிக்கையின் மீதும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்
வாழ்தல் உனக்கென தீர்மானிக்கும் வரை
பசி தீர்ந்த ப்ரிதொரு நாளில்
உன் அசாத்திய சொற் கட்டுகளை
அதன் இணைப்பின் சுவடு தெரியாமல்
உனக்கான வாசலை வடிவமைத்து
என் சன்னலடைக்கிறாய் மீண்டும்
கண்ணீர் உகுக்கிறாய் கண்ணீர் உகுக்கிறாய்
மன்றாட்டுகளில் அடங்காத கடவுளின்
மனம் கொண்ட உன் பலிபீடத்தில்
இப்போது இரண்டாவது ஆடு
இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும்-இனி
உன் பலிபீடம் மேய்ச்சல் நிலமாகட்டும்
என் கண்ணீரில் முளைத்த புற்களால்
எதற்கும் தயாராய் இரு
என் மாமிசச்சுவையின் பின்புலம்
தெரியவரும் நாளொன்றில் மேய்ச்சல் ஆடு
நரியின் விழியோடு துரத்தலாம்
அங்கே ஒரு யுத்தம் தொடங்கும் வீடு தப்பி
காட்டுப்பூனையாகியிருக்கும்
எதுவறியாமல் விழித்துக்கொண்ட நரிக்கும்
உன் ஓடுகால்கள் இளைப்பாற
முட்டிற்கு கைகொடுத்து குனியுமிடத்தில்
ஒழுகும் எச்சிலின் துளி விழாது பார்த்துக்கொள்
என் கல்லறையின் பசுமை கெடாதிருக்கட்டும்
எனதருமை துரோகத்தின் துவக்கமே
உனக்கான கடைசி உயிர் உடலற்று துயில்கிறது..
0 comments
Post a Comment