Pin It

Widgets

மதில்

Saturday, February 21, 2015 | 0 comments »

பதட்டத்தைக் காட்டிக்கொடுக்கும்
கை உதறல்களையும் 
வார்த்தை உடைதலையும் 

மணல் பதித்து வைத்த 
மண் பானையில்
நீரென ஊற்றுகிறேன்

கொலைக்கான காரணங்கள்
கேட்க மறுக்கும்
இடது பக்க மூளையை

கயிற்றின் முன்னிறுத்தி
தைரியத்திற்காக காத்திருக்கிறேன்
வாழ்ந்துகெட்ட முதியவனைப்போல

திறந்து வைத்த சன்னல் வழி
அறையெங்கும் அலறுகிறது
உச்சத்தின் முனகல்கள்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets