Pin It

Widgets

?????

Saturday, February 21, 2015 | 0 comments »

நீ தைரியமாக பரிசளித்த
உன் ஆதிக்கால திமிரை
கர்வம் கொண்ட காதலை

மண் பானையினடியில் 
சுருண்ட சர்பம் போல
ஏன் பதுக்கியிருக்கிறாய்?

உன் கோப்பைக்கான குரல்
சிதறிவிட்டதென்றா?

உன் பழத்திற்கான கைகள்
தடம் அற்றுவிட்டதென்றா?

உன் உணர்வுக்கான நிழல்
தொலைந்து விட்டதென்றா?

கைக்குள் பொதிந்து போகும்
நறுமணம் மாறிவிட்டதென்றா?

உன்னை உனதாய்
காட்டிக்கொள்ள இருந்த
ஒரே உயிர்

தற்கொலை செய்துகொண்டது என்றா?
அல்லது
கொலை செய்யப்பட்டது என்றா?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets