Pin It

Widgets

பசித்த பொழுதில் 
பாதையெங்கும் நாசியில் நுழைந்த
அந்த புளியோதரை வாசனைப்போல

எங்கேனும் மரணத்தின் வீச்சை
நாசி கண்டடைந்துவிடாதா
என்றொரு நப்பாசை

கரிசல் மணலின் மயிலாட்டத்தில்
உதிர்ந்த மயிலிறகு ஒன்று
நாட்குறிப்பினுள் இருந்து கொண்டு

நரம்புகளை உருவுவதற்கு
ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோற்கத் தோற்க

ஒரு பார்வையில் கிழித்தெரியும்
அளவிற்கான தோலின்றி வாழ்வது
சிரமமாய் இருக்கிறது எனக்கு.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets