பசித்த பொழுதில்
பாதையெங்கும் நாசியில் நுழைந்த
அந்த புளியோதரை வாசனைப்போல
எங்கேனும் மரணத்தின் வீச்சை
நாசி கண்டடைந்துவிடாதா
என்றொரு நப்பாசை
கரிசல் மணலின் மயிலாட்டத்தில்
உதிர்ந்த மயிலிறகு ஒன்று
நாட்குறிப்பினுள் இருந்து கொண்டு
நரம்புகளை உருவுவதற்கு
ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோற்கத் தோற்க
ஒரு பார்வையில் கிழித்தெரியும்
அளவிற்கான தோலின்றி வாழ்வது
சிரமமாய் இருக்கிறது எனக்கு.
பாதையெங்கும் நாசியில் நுழைந்த
அந்த புளியோதரை வாசனைப்போல
எங்கேனும் மரணத்தின் வீச்சை
நாசி கண்டடைந்துவிடாதா
என்றொரு நப்பாசை
கரிசல் மணலின் மயிலாட்டத்தில்
உதிர்ந்த மயிலிறகு ஒன்று
நாட்குறிப்பினுள் இருந்து கொண்டு
நரம்புகளை உருவுவதற்கு
ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தோற்கத் தோற்க
ஒரு பார்வையில் கிழித்தெரியும்
அளவிற்கான தோலின்றி வாழ்வது
சிரமமாய் இருக்கிறது எனக்கு.
0 comments
Post a Comment