Pin It

Widgets

நாவின் ஒப்பந்தம் பிறழ்ந்த
கோடைக்கால உச்சியில்
பால் தப்பிய குழந்தையாய்

மெதுமெதுவாய் குரலேற்றி
சோழியின் உருட்டல்களாய்
வழிய விடுகிறாய் கண்ணீரை

தீர்மானித்து வைத்திருந்த
சொற்களை பாசியின் நழுவலாய்
செவி பாய்த்ததும்

தலைகீழ் கட்டி உரிக்கும்
ஆட்டின் தோலாய்
சரசரவென வெளியேறுகிறாய்

நம்பிக்கையின் உயிர் பறித்து

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets