Pin It

Widgets

காதலின் விசமேறிய பூவுடலால் 
ஒரு பூத்துவாலை போல
என்னை சுற்றிக்கொள்கிறாய்

நழுவிடக் கூடாதென நிகழும்
பிடிமானங்கள் கழுத்திலும்
முதுகிலும் ஊர்கிறது

அந்தி சாயத்துவங்கிடும்
இரவின் வெளிச்சத்தில்
பற்களினால் மீசைகடிக்கிறாய்

அது உள்ளிறங்கி
நரம்புக்குவியலில் கருபிடித்து
காமத்தை பிரசவிக்கிறது

நீ கவிழ்ந்து படுத்திருக்கும்
பின்னங்கழுத்தின்
வியர்வை வழியே.

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets