அருவியென நெளிந்தோடும்
நரம்புகளின் ஊடே
மெளனத்தின் வாள்சொருவி
மூங்கில்போல கிழித்தெறிகிறாய்
மெளனமென்பது
உரையாடல் சார்ந்ததில்லை
உணர்வுகளின் கூட்டுவிளையாட்டு
என நீயும் அறிந்திருக்கிறாய்
எரியும் பனியில் காதில்
கதகதப்பூட்டாது விடிந்து போன
உன் அதிர்வற்ற குரலில் உமிழ்கிறாய்
பிடிவாதத்தில் ஊறிய வெறுப்பினை
உடலின் தசையறுத்தோ
மொழியின் முந்தானை விரித்தோ
அடங்கப்போவதில்லை இரவில்
இமை தட்டிய நொடிகள்!
நரம்புகளின் ஊடே
மெளனத்தின் வாள்சொருவி
மூங்கில்போல கிழித்தெறிகிறாய்
மெளனமென்பது
உரையாடல் சார்ந்ததில்லை
உணர்வுகளின் கூட்டுவிளையாட்டு
என நீயும் அறிந்திருக்கிறாய்
எரியும் பனியில் காதில்
கதகதப்பூட்டாது விடிந்து போன
உன் அதிர்வற்ற குரலில் உமிழ்கிறாய்
பிடிவாதத்தில் ஊறிய வெறுப்பினை
உடலின் தசையறுத்தோ
மொழியின் முந்தானை விரித்தோ
அடங்கப்போவதில்லை இரவில்
இமை தட்டிய நொடிகள்!
0 comments
Post a Comment