Pin It

Widgets

அருவியென நெளிந்தோடும்
நரம்புகளின் ஊடே
மெளனத்தின் வாள்சொருவி
மூங்கில்போல கிழித்தெறிகிறாய்

மெளனமென்பது
உரையாடல் சார்ந்ததில்லை
உணர்வுகளின் கூட்டுவிளையாட்டு
என நீயும் அறிந்திருக்கிறாய்

எரியும் பனியில் காதில்
கதகதப்பூட்டாது விடிந்து போன
உன் அதிர்வற்ற குரலில் உமிழ்கிறாய்
பிடிவாதத்தில் ஊறிய வெறுப்பினை

உடலின் தசையறுத்தோ
மொழியின் முந்தானை விரித்தோ
அடங்கப்போவதில்லை இரவில்
இமை தட்டிய நொடிகள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets