Pin It

Widgets

இரவல் இரவு

Tuesday, February 24, 2015 | 0 comments »

நடந்து நடந்து பாதம் அகன்று
மிதியடி தாண்டி வெளியேறும்
கிழவியின் ஓர் விரலை
ஒத்திருக்கிறது இவ்விரவு

தன்னைத்தானே மூடிக்கொள்ளும்
சுவர்களோடு
ஆயிரம்கால் அட்டையென
முன்னேறுகிறேன்
காலத்தின் நசுக்கலுக்கு அஞ்சி

மழையென பொழியும் குழாயின்
துளைகளில் உயிரைத்துளைக்க
முனைகிறேன்
எப்போதுமில்லா உத்வேகத்தில்

ஈரம் சொட்ட சொட்ட முகம் நனைய அனுமதித்த
ஈரக்கூந்தலின் உதிர்வில்
நெளிகிறதென் காமம்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets