Pin It

Widgets

பாதத்தின் மென்மை
எப்போதும் உன்னை
மடியிலேயே கிடத்தச்செய்தது

நாணல் போலெறும்
மீசை வளைவுகளும்
குழையும் அழகும்

இளம் சூட்டோடு
நள்ளிரவில் தொடரும்
மிருதுவான உறுமல்களும்

ஒருபோதும்
அனுமதிக்கவில்லை
உனை சந்தேகிக்க

மரப்பட்டையில் நகம் புதைத்து
வேட்டையாடும்
இரவின் கண்கள் உனதென்ற நாளில்

பூனை வீடு கடந்திருந்தது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets