பாதத்தின் மென்மை
எப்போதும் உன்னை
மடியிலேயே கிடத்தச்செய்தது
நாணல் போலெறும்
மீசை வளைவுகளும்
குழையும் அழகும்
இளம் சூட்டோடு
நள்ளிரவில் தொடரும்
மிருதுவான உறுமல்களும்
ஒருபோதும்
அனுமதிக்கவில்லை
உனை சந்தேகிக்க
மரப்பட்டையில் நகம் புதைத்து
வேட்டையாடும்
இரவின் கண்கள் உனதென்ற நாளில்
பூனை வீடு கடந்திருந்தது
எப்போதும் உன்னை
மடியிலேயே கிடத்தச்செய்தது
நாணல் போலெறும்
மீசை வளைவுகளும்
குழையும் அழகும்
இளம் சூட்டோடு
நள்ளிரவில் தொடரும்
மிருதுவான உறுமல்களும்
ஒருபோதும்
அனுமதிக்கவில்லை
உனை சந்தேகிக்க
மரப்பட்டையில் நகம் புதைத்து
வேட்டையாடும்
இரவின் கண்கள் உனதென்ற நாளில்
பூனை வீடு கடந்திருந்தது
0 comments
Post a Comment