Pin It

Widgets

கண்கள் அகல விரித்து
வரவேற்கும் பேத்தியை
அள்ளிக்கொள்ளும் தாத்தாவிற்கு

கசிந்த கள்ளிப்பழமாய்
ஈரம் பாய்ந்திருக்கும்
தசைகள் இறுக்கிய கண்கள்

தென்னிய நரம்புகளில்
இரயிலோட்டும் விரல்களில்
பாம்படம் உருக்கிய மோதிரம்

"நல்லாவே இல்ல தாத்தா" என
பாட்டி பெயர் சொல்லி அழைப்பதை
நிராகரிக்கும் பேத்திக்கு

மனைவி மாடுமுட்டி இறந்த கதை
பேத்திக்கு சொல்ல வளரவில்லை
என்பதை தாத்தா அறியாமலில்லை

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets