Pin It

Widgets

தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கும்
மீனிற்கு
இரு கைகள் இணைந்து
அதில் நீர் நிறைத்து
கொண்டு செல்கிறாய்
க்டல் நோக்கி

விரலின் இடுக்குகளில்
வழியே வழியும் நீரின்
வேகம் கண்டு நடை
வேகம் கூட்டுகிறாய்

புல்லாங்குழல் விற்பவனின்
இசை மீட்கும் திசை நோக்கி
மீனும் அதனைத்தொடர்ந்து
நீயும் திரும்பிய கனத்தில்

ஆழமாய் குளிபறித்து
நீர் நிரப்பி
நீந்தவிடுகிறாய்-உன்
நீலநிற துப்பட்டாவை
போர்த்தியபடி

கடலும்
வானமும்
பூமியும்
நீயானதன் மகிழ்வாய்
குமிழ்கள் எடுக்கிறது
மீன்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets