Pin It

Widgets

தலை சாயும்
இடமெங்கும்-உன்
மடிவாய்க்கும்
நாளொன்று வேண்டும்

கண் பார்க்கும்
திசையெங்கும்
பிசிறாத-உன்
புன்னகை வேண்டும்

நடக்கும்
பாதையெங்கும்
தொய்வில்லா-உன்
கை கோர்ப்பு வேண்டும்

மனம்
உடையும் பொழுதெல்லாம்
சில்லுகளாய்-உன்
முகம் வேண்டும்

உயிர் நாசி
தேடும் வேளையில்
நுகர-உன்
கூந்தல் வேண்டும்

பசியென
காத்திருக்கையில்
மிளகாய் கடிக்கு-உன்
விரல் வேண்டும்

சோகமென அமர
பிடரிமயிர்
அழுந்தப்பிடிக்க-உன்
காமம் வேண்டும்

தாயோ தந்தையோ
அவ்வுறவின்
உயிராய்-உன்
அன்பு வேண்டும்

பொழுதுகள் தொலைக்க
பொம்மையாக்கி
பொம்மையாகி-உன்
குழந்தைத்தனம் வேண்டும்

சினத்தில் வார்த்தை
உதிர்க்கையிலெல்லாம்
உன் பொறுமையின்
வார்ப்பில் வென்றெடுக்க வேண்டும்

உயிர் பிரிவு முதல் பிரிவு
யாருடையைதோ
நொடிப்பொழுதில்-நான்
நின்னைச் சரணடைய வேண்டும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets