Pin It

Widgets

கொஞ்சம் அழுந்தப்பொத்திய 
கண்களை கசக்கியபடி 
கால்மடக்கியமர்ந்த கடற்கரையில் 

ஓர் இரவை பல துண்டுகளாக
உணர்ந்தக் கதையை பக்கவாட்டில்
ஒன்று ஒன்று என கோடிடுகிறாள்

இருகோடுகளின் இடைவெளி
வயல் வரப்பென வரைகிறது
சாய்ந்த அந்தியின் கணக்கில்

வாய் பொத்தி அழும் உதட்டின்
கீறல்களில் எச்சில் பூச இல்லை
சுனைக்கான அந்தக்கரங்கள்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets