Pin It

Widgets

ஒட்டகத்தின் சேமிப்புக்கிடங்கென
உனையடைத்து பயணிக்கிறேன்
துருவேறிய தண்டவாளத்தில்.

மழையின் ஈரத்தில் தொலைத்த 
சருகின் சரசரப்பு அமிழ்ந்து
விடுவிக்கிறது ஒவ்வொரு எட்டு நடையை

முன்னெச்சரிக்கையற்ற இப்பாதையில்
உனைக்கண்டால் என்ன?
எனைக்கண்டால் என்ன?

வேண்டுதலற்ற பிரார்த்தனையில்
கைக்கூப்பிய விரல்களுக்குள்
தற்காலிகமாய் அகப்பட்டு செத்தொழி

பட்டாம்பூச்சியாய்..

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets