Pin It

Widgets

வீழ்த்தப்படும் புதைகுழி
மூடியச் சருகில் நீ
எப்படி மலர்ந்தாய்
வாடாத மலராய்?

உன் சாதுர்யம்
கற்கும் நாளில்
செத்தொழியென வாழ்த்தி
செத்துப்போவேன்

நீ எப்போதும் போல
மகளுக்கான வாஞ்சையோடும்
காதலிக்கான காமத்தோடும்
கண்ணீர் உதிர்த்து,

அகால மரணம்
சுவரொட்டி மேயும்
கருப்பு நிற ஆட்டின்
சிரத்தையோடு...

பின் ஞாபகார்த்தமாக
கழுத்தறுத்தலில்
மிஞ்சிய குருதியில்
தேகம் குளி

நீயும் உன் துணையுமாய்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets